யாழ்.மாதகல் மீனவர்களின் படகை மோதி மூழ்கடித்த இந்திய இழுவை படகுகள்..! கடலில் உயிருக்கு போராடிய மாதகல் மீனவர்கள் இருவர் மீட்கப்பட்டனர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாதகல் மீனவர்களின் படகை மோதி மூழ்கடித்த இந்திய இழுவை படகுகள்..! கடலில் உயிருக்கு போராடிய மாதகல் மீனவர்கள் இருவர் மீட்கப்பட்டனர்..

யாழ்.மாதகல் மீனவர்களின் படகு மீது இடித்து மூழ்கடித்த இந்திய இழுவை படகு தப்பி ஓடிய நிலையில் கடலில் தத்தளித்த இரு மாதகல் மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டிருக்கின்றனர். 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மாதகல் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் மீன்பிடி நடவடிக்கைக்காக நேற்றய தினம் படகில் சென்றிருக்கின்றனர். 

எனினும் அவர்கள் கரை திரும்பாத நிலையில் இன்று காலை அவர்களை தேடி மாதகல் மீனவர்கள் சிலர் படகில் சென்றிருக்கின்றனர். 

இதன்போது கடலில் வலைகளை மிதக்க வைக்க பயன்படுத்தப்படும் மிதவையை பயன்படுத்தி தத்தளித்தக் கொண்டிருந்த இருவரையும் மீட்டுள்ளனர். 

மீட்கப்பட்டவர்களிடம் சம்பவம் தொடர்பாக வினவியபோது தாம் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் இந்திய இழுவை படகு தமது படகு மீது மோதி கடலில் மூழ்கத்த்ததாகவும்,

படகு மற்றும் படகு இயந்திரம், வலைகள் கடலில் மூழ்கிய நிலையில் தாம் மிதவைகளை பயன்படுத்தி தத்தளித்துக் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு