யாழ்.மேல் நீதிமன்றத்தில் பணியாற்றும் பட்டதாரி பயிலுனருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.பஷையூரை சேர்ந்தவர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மேல் நீதிமன்றத்தில் பணியாற்றும் பட்டதாரி பயிலுனருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.பஷையூரை சேர்ந்தவர்..

யாழ்.மேல் நீதிமன்றில் பணியாற்றும் பட்டதாரி பயிலுனருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

குறித்த பட்டதாரி பயிலுனர் யாழ்.பாஷையூர் பகுதியை சேர்ந்தவர் என யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி கூறியுள்ளார். 

யாழ்.நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள நீதிமன்றங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள் ஆகியோரிடம் பெறப்பட்ட மாதிரிகள் 

முல்லேரியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் அவற்றின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் இன்று கிடைத்துள்ள நிலையில் ஒருவருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. 

இதேவேளை, யாழ்.சட்டத்தரணிகள் சிலரது மாதிரிகளின் முடிவு எடுக்க முடியாதுள்ளதால் மீண்டும் அவர்களிடம் மாதிரிகள் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு