யாழ்.நாவற்குழியில் பிரதேசசபை உறுப்பினர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த 3 பேர் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழியில் பிரதேசசபை உறுப்பினர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த 3 பேர் கைது..!

யாழ்.நாவற்குழி பகுதியில் திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய கும்பலையும், திருட்டுப் பொருட்களையும் பிடித்துக் கொடுத்ததற்காக பிரதேசசபை உறுப்பினர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த பணம், நகை மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு சென்றிருந்தது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கொள்ளை கும்பலை 12 மணி நேரத்தில் இளைஞர் குழு பிடித்ததுடன்

பொருட்களையும் நபர்களையும் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தது. இந்நிலையில் குறித்த இளைஞர் குழுவில் இடம்பெற்றிருந்த சாவகச்சோி பிரதேசசபையின் தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் மீது நேற்று மாலை வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் 3 பேரை கைது செய்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு