பொலிஸாரின் மனிதாபிமானமற்ற செயல்கள் எல்லை மீறுகிறது..! நிச்சயம் தலையிடுவோம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
பொலிஸாரின் மனிதாபிமானமற்ற செயல்கள் எல்லை மீறுகிறது..! நிச்சயம் தலையிடுவோம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை..

இலங்கை பொலிஸாரின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம் குறித்த நடவடிக்கைகளில் தலையிடப்போவதாக எச்சரித்துள்ளனர். 

நாட்டில்பொலிஸாரின் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள் குறித்த கவலையளிக்கும் போக்கினை உன்னிப்பாக அவதானிக்கப்போவதாக தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 

தேவைப்பட்டால் தலையிடப்போவதாக தெரிவித்துள்ளது. குற்றமிழைத்த பொலிஸாரை நீதியின் முன்நிறுத்த தவறினால் அது சட்டத்தின் ஆட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் 

என தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ரஜீவ் அமரசூரிய இதனால் பொதுமக்களிற்கு பொலிஸ் திணைக்களத்தின் மீதான நம்பிக்கை பாதிக்கப்படலாம். 

சட்டத்தினால் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களை தவிர பலத்தினை எந்த சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தக்கூடாது அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு