யாழ்.நாக விகாரையில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரியின் விரலை கடித்த இளைஞன்..! பின்னணி இதுவா?

ஆசிரியர் - Editor I
யாழ்.நாக விகாரையில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரியின் விரலை கடித்த இளைஞன்..! பின்னணி இதுவா?

யாழ்.நாக விகாரையில் பொலிஸாரின் கை விரலை கடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இளைஞன் ஒருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றான். 

நாகவிகாரையில் கடமையிலிருந்த பொலிசாருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞனுக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வாய்த்தர்க்கம் தொடர்ந்து கைகலப்பாக மாறியுள்ளது. இதில் பொலிசாரின் கை விரலை குறித்த இளைஞன் கடித்துள்ளார்.

காயத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 

விரலை கடித்த இளைஞரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு