நாடாளுமன்ற தேர்தலில் 50 வீத ஆசனங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படவேண்டும்...

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற தேர்தலில் 50 வீத ஆசனங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படவேண்டும்...

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெண்கள் 50 சதவீதம் உள்வாங்கப்பட வேண்டும் என வடக்கு கிழக்கு அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.

யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே பெண்கள் குழு கூட்டாக அறிவித்தது.

அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்...

பாராளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாக பகிரப்பட வேண்டும் என  தமிழ் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை விடுத்தனர்.

தற்போது புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க பெண் பிரதமரை நியமித்து அரசியலில் பெண்களின் வகி பங்கினை சமமாக பேணி வருகிறார்.

இந்த மாற்றம் வரவேற்கத்தக்க விடயமாக அமைந்துள்ளது ஆனால் தமிழ் பெண்களாகிய எமக்கு எமது தமிழ் கட்சிகள் எவையுமே பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தினை சரியாக வழங்கவில்லை. 

நாம் நீண்ட காலமாக அரசியல் செயற்பாடுகளில் ஆண்கள் ஈடுபடுவதற்கு பல்வேறு வகையிலும் எமது உழைப்பை வழங்கி வருகிறோம் ஆனாலும் அரசியலில் நாம் நேரடியாக ஈடுபடுவதற்கு விமர்சனம் வழங்கப்படுவதில்லை.

பெண்களுடைய பிரச்சனைகளை வெளியில் கொண்டு வருவதற்கும் பெண்களுக்கு பெண்களே வாக்களிப்பதற்கும் மக்கள் மத்தியில் கருத்துக்களை தெரிவிக்கும் ஆண் அரசியல்வாதிகள.

பெண்களுக்கு வாக்களியுங்கள் என்றும் பெண்களிலே படித்த ஆளுமை மிக்க தலைமைத்துவம் கொண்ட பெண்களை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கருத்துக்களை வலியுறுத்துவதில்லை.

மாறாக பெண்களை எல்லா அரசியல் செயல்பாடுகளிலும் பயன்படுத்தும் ஆண் வேட்பாளர்கள் அவர்களை தேர்தல்களில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக அவர்களுடைய சேவை வழங்குவதற்கு இடம் அளிப்பதில்லை இவ்வாறு பல கட்சிகள் எம்மை புறந்தள்ளி வருகின்றனர்.

எனவே இதன் காரணமாக பல கல்வி கற்ற ஆழமாக உள்ள பெண்கள் அரசியல் இருந்து புறந்தள்ள படுகிறார்கள் எனவே இம்முறை ஜனாதிபதியின் பிரதமரின் வேலை திட்டங்களை முன்மாதிரியாக கொண்டு,

அனைத்து கட்சிகளும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து இரண்டு பெண்களை ஆவது வேட்பாளராக அறிவிக்க வேண்டும் அவ்வாறு பெண்களும் அரசியலில் ஈடுபடுத்தப்படுகின்ற போதே சரிநிகர் சமமாக பெண்கள் தமது பிரச்சினைகளை வெளியிட்டு கொண்டு வந்து 

மக்களுக்கு சேவை வழங்க முடியும் என்றும் இதற்காக அனைத்து தரப்பினரும் முன் வந்து பெண்களை உள்வாங்கி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அவர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் அது தொடர்பிலே ஆண்கள் தமது மேடைப்பேச்சுகளில் கூட குறிப்பிட வேண்டும் என்று வடக்கு கிழக்கு அரசியலில் ஈடுபடும் பெண்கள் இன்றைய தினம் கோரிக்கைகளை முன்வைத்தனர்

அத்துடன் தற்போது பதவி வகிக்கின்ற ஜனாதிபதி பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்குகின்ற அதே நேரம் பெண் பிரதமரை நியமித்திருக்கிறார்.

எனவே பாராளுமன்றத்தில் பெண்களின் அங்கத்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் இதற்காக கட்சிகள் ஒவ்வொன்றும் பெண் பிரதிநிதிகள் உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கையிணையும் அனைவரும் முன்வைத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு