மறைந்த காட்டூனிஸ்ட் அஸ்வின் - தேசிய பற்றாளர் விராஜ் மென்டிஸ் ஆகியோரின் நினைவு தினம்..

ஆசிரியர் - Editor I
மறைந்த காட்டூனிஸ்ட் அஸ்வின் - தேசிய பற்றாளர் விராஜ் மென்டிஸ் ஆகியோரின் நினைவு தினம்..

மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் நினைவேந்தல் நிகழ்வும், தேசிய பற்றாளர் விராஜ் மென்டிஸின் அஞ்சலி நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

யாழ்.ஊடக அமையத்தில், அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமாரின் தலைமையில், மாலை 4 மணியளவில் நடைபெற்றது.

அஸ்வினின் திருவுருவ படத்திற்கு அஸ்வினின் பெற்றோர் மலர்மாலை அணிவித்தனர். தொடர்ந்து தேசிய பற்றாளர் விராஜ் மென்டீஸின் திருவுருவ படத்திற்கு, யாழ்.பல்கலைகழ கலைப்பீடாதிபதி கலாநிதி ரகுராமும், ஊடக கற்கைகள் துறை தலைவர் பூங்குழலி ஆகியோர் மலர்மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து அஸ்வின் மற்றும் தேசிய பற்றாளர் விராஜ் மென்டிஸ் ஆகியோரின் நினைவுரைகள் இடம்பெற்றதுடன், 

அஸ்வினின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊடக கற்கைநெறியை தொடரும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு