மக்கள் நடமாட்டம் அதிகமான யாழ்.நல்லுாரில் வீடு புகுந்து கத்தி முனையில் கொள்ளை..! தீவிர விசாரணையில் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
மக்கள் நடமாட்டம் அதிகமான யாழ்.நல்லுாரில் வீடு புகுந்து கத்தி முனையில் கொள்ளை..! தீவிர விசாரணையில் பொலிஸார்..

சன நடமாட்டம் அதிகமான நல்லுார் பகுதியில் வீடு புகுந்து கத்திமுனையில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றது. 

குறித்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது. வீட்டில் முதியவர் தனித்திருந்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் கத்தி முனையில் அச்சுறுத்தி 

சுமார் 9 பவுண் நகை மற்றும்பணம் ஆகியற்றை கொள்ளையிட்டுள்ளது. வீட்டின் சமையலறை யன்னலை பிரித்து அதன் உள்ளே இருந்த கம்பி நெற்றையும் உடைத்து 

சமையலறைக்குள் உட்புகுந்த கொள்ளை கும்பல் சமையலறையின் கதவையும் உடைத்த வண்ணம் வீட்டிற்குள் நுழைந்துள்ளது. 

வீட்டில் இருந்த மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி சத்தம் எழுப்பாது வீட்டில் உள்ள நகை பணத்தை எடுத்துதருமாறும் கோரியுள்ளனர்.

இதனால் பதற்றமடைந்த மூதாட்டி 3 பவுண் சங்கிலி, 2 பவுண் சோடிக் காப்பு, ஒரு பவுண் மோதிரம் என்பவற்றை கலட்டிக் கொடுத்தபோதும் 

காதில் இருந்த பெறுமதியான தோட்டையும் கழட்டுமாறு அச்சுறுத்தியுள்ளான். இதனால் மூதாட்டி தோட்டையும் கலட்டி வழங்கியுள்ளார்.

 

இவற்றைப் பெற்றுக்கொண்ட கொள்ளையர்கள் ஒவ்வொரு அறையாக தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். 

இவ்வாறு மேற்கொண்ட தேடுதலில் முதியவரின் கையில் இருந்த மோதிரத்தையும் அபகரித்ததோடு வீட்டில் இருந்த 15 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.

இவை அனைத்தின்போதும் கொள்ளையன். முகத்தை மூடியவாறு கையிற்கு கையுறை அணிந்திருந்துள்ளான். 

பின்னர் வீட்டின் அருகே நீண்டகாலமாக கைவிடப்பட்டுள்ள வீட்டின் வழியாக தப்பிச் சென்றுள்ளான்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு