2 லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் 3 பிள்ளைகளின் தந்தை கைது..! யாழ்.காங்கேசன்துறையில் இன்று அதிகாலை பொலிஸார் அதிரடி..

ஆசிரியர் - Editor I
2 லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் 3 பிள்ளைகளின் தந்தை கைது..! யாழ்.காங்கேசன்துறையில் இன்று அதிகாலை பொலிஸார் அதிரடி..

சுமார் 50 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் யாழ்.காங்கேசன்துறை பகுதியில் 49 வயதான குடும்பஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

குறித்த நபர் வலி,வடக்கு கட்டுவன் பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை என தொியவந்திருக்கின்றது. 

குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை 1 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவரிடமிருந்து சுமார் 2லட்சம் பெறுமதியான 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு