யாழ்.கல்வி வலய பாடசாலைகளின் முடக்கம் மறு அறிவித்தல்வரை நீடிக்கும்..! மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு..

யாழ்.கல்வி வலய பாடசாலைகளின் முடக்கம் மறு அறிவித்தல்வரை நீடிக்கும் என மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
அண்மைய நாட்களில் ஏற்பட்ட கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பை அடுத்து மூடப்பட்ட யாழ். வலயப் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரும் வரை தொடர்ந்தும் மூடப்பட்டிக்கும்.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பணிப்பாளர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், நாங்கள் அதிகமான நபர்களிடம் பி.சி.ஆர் மாதிரிகளை எடுத்ததற்குக் காரணம் கொரோனாவின் பரம்பல் தீவிரம் எவ்வாறு இருக்கின்றது.
என்பதைக் கண்டறிவதற்காகவே.இதன் மூலம் கிடைக்கப்பெற்ற முடிவுகளின் பிரகாரம் இதனைக் கட்டுப்படுத்தப்படக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.
எனவே மக்கள் தேவையற்றஅச்சத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம் என்றார்.