யாழ்.தீவு பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்த புதிய பேருந்துகளை கொள்வனவு செய்கிறது அரசு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.தீவு பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்த புதிய பேருந்துகளை கொள்வனவு செய்கிறது அரசு..!

யாழ்.மாவட்டத்திலுள்ள தீவு பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக புதிய பேருந்துகள் கொள்வனவு செய்யப்படும். என போக்குவரத்து இராஜாங்க அமைப்பர் திலும் அமுனுகம கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், தீவுப்பகுதிகளில் தற்போது மிகவும் பழைய பேருந்துகளே பாவனையில் உள்ளதாகவும், இதன்காரணமாகவே புதிய பேருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பேருந்துகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் அவை வட மாகாணத்திலுள்ள தீவு பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு