யாழ்.பருத்துறையில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி திருண மண்டபத்திற்கு சீல்..! சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்துறையில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி திருண மண்டபத்திற்கு சீல்..! சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் மாவட்டத்தில் திருமண நிகழ்வுகளை மண்டபங்களில் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் யாழ்.பருத்துறை - கரணவாய் பகுதியில் திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

கரணவாய் மூத்த விநாயகர் மண்டபத்தில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த விடயம் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினருக்கு தொியப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 

குறித்த மண்டபத்தில் திருமண நிகழ்வு நடைபெறுவதை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், திருமண மண்டபத்திற்கு சீல் வைத்துள்ளனர். இதேவேளை யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்தமையைத் தொடர்ந்து 

கல்யாண மண்டபங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் என்பவற்றிற்கு பங்குபற்றுவோரின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டதுடன் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் அனுமதிகள் பெறப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு