யாழ்.வட்டுக்கோட்டையை சேர்ந்த இருவர் ஒரு கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது..! மதுவரி திணைக்களம் அதிரடி..

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டையை சேர்ந்த இருவர் ஒரு கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது..! மதுவரி திணைக்களம் அதிரடி..

யாழ்.வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இருவர் சுமார் 1 கோடி ரூபாய் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

மதுவரி திணைக்கள அதிகாரி அசோகரட்ணத்தின் அறிவுறுத்தலுக்கமைய மதுவரி பரிசோதகர் வசீகரன் தலமையிலான மல்லாகம் மற்றும் பருத்துறை மதுவரி திணைக்களத்தினர்

நேற்று மாலை மேற்கொண்டிருந்த விசேட சுற்றிவளைப்பு தேடுதலின்போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவர்கள் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு