யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் மற்றும் நல்லுார் பிரதேசபை தவிசாளர் மயூரன் ஒழுங்கமைப்பில் திருநெல்வேலி முடக்கலில் உள்ள மக்களுக்கு உதவி..
யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் நல்லுார் பிரதேசசபை தவிசாளர் ப.மயூரன் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் திருநெல்வேலி வடக்கு முடக்கலுக்குள் சிக்கியுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி வி.திருக்குமரன் மற்றும் கனடாவிலுள்ள கொட்வின் தினேஸ், முரளி, பிரியா அமலன் ஆகியோரின் நிதி உதவியுடன் சுமார் 100 குடும்பங்களுக்கு இன்றைய தினம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டிருக்கின்றது.