ஐனாதிபதி கோட்டபாயவுடன் தொலைபேசியில் உரையாடிய சீன ஐனாதிபதி..? என்ன விடயம் குறித்து உரையாடப்பட்டது?

ஆசிரியர் - Editor I
ஐனாதிபதி கோட்டபாயவுடன் தொலைபேசியில் உரையாடிய சீன ஐனாதிபதி..? என்ன விடயம் குறித்து உரையாடப்பட்டது?

ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவுடன் சீன ஐனாதிபதி ஜி ஜின்பிங் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருக்கின்றார்.

இந்த தொலைபேசி உரையாடலின் போது இரு தலைவர்களும் முக்கியமான விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு 100 வருடங்கள் பூர்த்தியாவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி சீன கம்யுனிஸ்ட் கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளை பாராட்டியுள்ளார்.

சீன ஜனாதிபதியின் தலைமையின் கீழ் சீனா பொருளாதார அபிவிருத்தி மற்றும் கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் பெரும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது என இலங்கை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.

இலங்கைக்கான சீனாவின் பெறுமதி மிக்க ஆதரவை இலங்கை பாராட்டுகின்றது என தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி முக்கியமான விவகாரங்களில் பரஸ்பரம் ஒருவரின் நிலைப்பாட்டிற்கு மற்றவரின் உறுதியான ஆதரவை வழங்குவதற்காக இலங்கை இணைந்து செயற்பட தயாராகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு