யாழ்.பல்கலைகழக சித்த வைத்திய அலகு, மற்றும் இராமநாதன் நுண்கலை கல்லுாரி ஆகியன பீடங்களாக தரம் உயர்த்தப்படுகிறது..! அனுமதி வழங்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக சித்த வைத்திய அலகு, மற்றும் இராமநாதன் நுண்கலை கல்லுாரி ஆகியன பீடங்களாக தரம் உயர்த்தப்படுகிறது..! அனுமதி வழங்கப்பட்டது..

யாழ்.பல்கலைகழகத்தில் மேலும் 2 பீடங்களை உருவாக்க பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

யாழ்.பல்கலைக்கழக சித்த வைத்திய அலகு, இராமநாதன் நுண்கலைக் கல்லூரி ஆகிய இரண்டையும் பீடங்களாகத் தரமுயர்த்துவதற்கு கடந்த வருடம் பேரவையின் சிபார்சுடன் துணைவேந்தரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

குறித்த கோரிக்கை கடந்த மாதம் இடம்பெற்ற பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. 

இதன்படி, இது வரை காலமும் சித்த மருத்து அலகாக இயங்கி வந்த சித்த வைத்தியத் துறையை சித்த வைத்திய பீடமாக மாற்றுவதற்கும், 

கலைப்பீடத்தின் கீழ் இயங்கி வந்த இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை சேர். பொன் இராமநாதன் நிகழ்த்துகை மற்றும் கட்புல கலைகள் பீடமாக உருவாக்குவதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு