தமிழீழ விடுதலை புலிகளின் நடவடிக்கைளை ஊக்குவித்தனர்..! யாழ்.அரியாலையில் இணைய ஊடக நிறுவனம் அதிரடிப்படையால் முற்றுகை, இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் நடவடிக்கைளை ஊக்குவித்தனர்..! யாழ்.அரியாலையில் இணைய ஊடக நிறுவனம் அதிரடிப்படையால் முற்றுகை, இருவர் கைது..

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் இயங்கியதான குற்றச்சாட்டில் யாழ்.மாவட்டத்தில் இயங்கிவந்த தமிழ் யூடியூப் சனலில் பணியாற்றிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேற்படி தகவலை பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார். இது கூறியுள்ளதாவது, தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகள் ஊக்குவித்ததான குற்றச்சாட்டிலேயே

இருவர் கைது செய்து கெய்யப்பட்டுள்ளதாகவும், இன்று காலை குறித்த அலுவலகத்தை முற்றுகையிட்ட அதிரடிப்படையினர் மற்றும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் இருவரை கைது செய்ததுடன், அலுவலகத்திலிருந்த உபகரணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் 

பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு