யாழ்.கல்வி வலய பாடசாலைகள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் இரு பாடசாலைகளில் பரீட்சை நடத்தப்பட்டதாம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வி வலய பாடசாலைகள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் இரு பாடசாலைகளில் பரீட்சை நடத்தப்பட்டதாம்..!

யாழ்.நகரம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.கல்வி வலய பாடசாலைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் இரு பாடசாலைகளில் மட்டும் இன்று பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. 

தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சைகள் யாழ்.கல்வி வலயத்தின் ஒழுங்கமைப்பில் நடத்தப்பட்டிருக்கின்றது. யாழ்.நகரம் மற்றும் திருநெல்வேலி ஆகியன கண்காணிப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டிருப்பதுடன், 

தீவிரமான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு கொவிட் செயலணியின் தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் மாகாண சுகாதார பிரிவு ஆகியன கேட்டுவரும் நிலையில் குறித்த பரீட்சைகள் இரு பாடசாலைகளில் மட்டும் நடத்தப்பட்டது எவ்வாறு?

என பெற்றோர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு