இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணையில் புற்றுநோயை உண்டாக்கும் “எப்லடொக்சின் ஹசினோஜென்” இராசயனம், அதிகாரபூர்வமாக கூறுகிறது அரசு..

ஆசிரியர் - Editor I
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணையில் புற்றுநோயை உண்டாக்கும் “எப்லடொக்சின் ஹசினோஜென்” இராசயனம், அதிகாரபூர்வமாக கூறுகிறது அரசு..

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணையில் புற்றுநோயை உண்டாக்கும் “எப்லடொக்சின் ஹசினோஜென்” இரசாயனம் அடங்கி உள்ளமை விஞ்ஞான ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக இலங்கை தர சான்றுகள் நிறுவன பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியிருப்பதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண கூறியுள்ளார். 

அந்த வகையில் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் தரமற்றவை என உறுதியாகி உள்ளது. மேலும் அவற்றை முழுமையாக நிராகரிப்பதாகவும் இலங்கை தரச்சான்று நிறுவகம் தெரிவித்துள்ளது.எனவே, தரச்சான்று நிறுவகத்தின் பரிசோதனைகள் நிறைவடையும் வரையில் 

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் வசமிருந்த தேங்காய் எண்ணெய்யை மீள் ஏற்றுமதி செய்யவும் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு