யாழ்.மாவட்டம் முடக்கப்படுமா..? சடுதியாக அதிகரித்த தொற்றாளர்கள், இராணுவ தளபதி சவேந்திர சில்வா விளக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டம் முடக்கப்படுமா..? சடுதியாக அதிகரித்த தொற்றாளர்கள், இராணுவ தளபதி சவேந்திர சில்வா விளக்கம்..

யாழ்.மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் மாவட்டத்தை முடக்குவதா? இல்லையா? என்பதை அரசாங்கம் தீர்மானிப்பதில்லை. மக்களே அதனை தீர்மானிக்கிறார்கள். என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் 19 தடுப்பு செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

யாழ்.மாவட்டத்தில் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளமை குறித்தும், தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்புக் குறித்தும் கருத்து தொிவிக்கும்போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்ட மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றவேண்டும். மாவட்டத்த்தில் சில பகுதி முடக்கப்பட்டுள்ள நிலையில், 

தேவையற்ற பயணங்களை தவிர்த்து சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு பூரணமான ஒத்துழைப்பினை மக்கள் வழங்கவேண்டும். எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு