யாழ்.நகரில் நாளையும் பீ.சி.ஆர் பரிசோதனை மாதிரி பெறப்படும்..! இன்று பெறப்பட்ட மாதிரிகள் நாளை பரிசோனை, மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் நாளையும் பீ.சி.ஆர் பரிசோதனை மாதிரி பெறப்படும்..! இன்று பெறப்பட்ட மாதிரிகள் நாளை பரிசோனை, மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

யாழ்.மாநகரில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் முடக்கப்பட்டிருக்கும் பகுதியை சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிலையத்தில் கடமையாற்றும் பணியாளர்கள் 870 போிடம் இன்று பீ.சி.ஆர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. 

பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டு இன்றைய தினம் பெருமளவான வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் கூடிய நிலையில் இன்று 870 பேரிடமிருந்து பீ.சி.ஆர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருக்கின்றது. இவர்களுக்கான பரிசோதனை நாளை நடைபெறவுள்ளது. 

அதேவேளை இன்றைய தினம் பரிசோதனை மாதிரிகளை வழங்க முடியாதவர்களுக்காக நாளைய தினமும் பரிசோதனை மாதிரிகளை பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். என மாகாண சுகாதார பணிப்பாளர் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு