SuperTopAds

முல்­லையில் நிலவும் கடும் வரட்­சி­யினால் சிறு­போகச் செய்கை பாதிப்பு…!

ஆசிரியர் - Admin
முல்­லையில் நிலவும் கடும் வரட்­சி­யினால் சிறு­போகச் செய்கை பாதிப்பு…!

முல்­லைத்­தீவு  மாவட்­டத்தின் நிலவும் வரட்­சி­யினால் வவு­னிக்­கு­ளத்தின் நீர்­மட்டம் குறை­வாகக் காணப்­ப­டு­வ­தனால் இரண்டு ஆண்­டுகள் சிறு­போ­கச் ­செய்­கையை முற்­றாக மேற்­கொள்ள முடி­யாமல் போயுள்­ள­தாக விவ­சாய அமைப்­புக்கள் கவலை தெரி­வித்­துள்­ளன.

இம் மாவட்­டத்தின் பாரிய நீர்ப்­பா­சனக் குளங்­களின் ஒன்­றான வவு­னிக்­கு­ளத்தின் கீழ் கால­போ­கத்தில் சுமார் 1060 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் 2260 வரை­யான பய­னா­ளிகள் நெற்­செய்­கை­யையும் 135 ஏக்கர் வரை­யான நிலப்­ப­ரப்பில் 950 வரை­யான விவ­சா­யிகள் ஏற்று நீர்ப்­பா­ச­னத்தின் மூலமும் விவ­சாய நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இந்­நி­லையில் கடந்த வரு­டங்­க­ளிலும் தற்­போதும் காணப்­படும் கடும் வரட்­சி­யினால் சிறு­போ­கச்­ செய்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் விவ­சா­யத்தை வாழ்­வா­தா­ர­மாக நம்பி வாழ்ந்த குடும்­பங்கள் மேலும் வறுமை நிலைக்­குத்­ தள்­ளப்­பட்­டுள்­ள­தாக வவுனிக்குளத்தின் கீழ் உள்ள கமக்கார அமைப்புக்கள் மற்றும் விவசாய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.