ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருவெற்றியாகும்..!

ஆசிரியர் - Editor I
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருவெற்றியாகும்..!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்திருக்கும் பாரிய வெற்றி என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்று இயக்குநர் கெனெத் ரொத் கூறியுள்ளார். 

தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை பாதிக்கப்பட்ட மக்களிற்கு பெரும் வெற்றியாகும். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை 22க்கு 11 என்ற அடிப்படையில் 

தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களிற்கான எந்த பொறுப்புக்கூறலும் இல்லை என்பதை மனித உரிமை பேரவை அங்கீகரித்துள்ளதுடன் ராஜபக்ச அரசாங்கத்தை தொடர்ந்தும் கண்காணி;க்குமாறு உத்தரவிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு