யாழ்.மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு..

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி யாழ்.மாவட்ட மகளிர் விவகார குழுக்களின் சம்மேளனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட மகளிர் தின நிகழ்வு யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. 

நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் கலந்து கொண்டிருந்தார். 

மேலும் இந்நிகழ்வில் யாழ்.பல்கலைகழக சட்டத்துறை விரிவுரையாளர் திருமதி கோசலை மதன், யாழ்.மாவட்ட மகளிர் சங்க மாவட்ட இணைப்பாளர் உதேகினி நவரட்ணம்

மற்றும் மாவட்ட மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், யாழ்.மாவட்ட செயலக பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு