யாழ்.நெடுந்தீவு மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைய 2வது பயணிகள் பேருந்து இன்று கையளிக்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைய 2வது பயணிகள் பேருந்து இன்று கையளிக்கப்பட்டது..!

யாழ்.நெடுந்தீவு மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் 2வது இ.போ.ச பேருந்து இன்று கையளிக்கப்பட்டுள்ளது. 

நெடுந்தீவு மக்களின் பயன்பாட்டுக்கான குறித்த பேருந்தை யாழ்மாவட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன யாழ்.மாவட்ட அமைப்பாளர் தம்பிதுரை ரஜீவ் பிரதேச செயலரிடம் கையளித்தார்.

இந் நிகழ்வில் நெடுந்தீவு பெரமுனவின் அமைப்பாளரும் வனஜீவராசிகள் வனப்பாதுகாப்பு அமைச்சரின் வடக்கு மாகாண இணைப்பு செயலாளர் மா.பரமேஸ்வரன்,

நெடுந்தீவு பிரதேசசபையின் முன்னால் தலைவரும் நெடுந்தீவு அமைப்பாளருமான றோசான், பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சரின் வடமாகாண இணைப்பாளர் பாலரமணன்,

வலிகாமம் கிழக்கு அமைப்பாளர் நடேசன், தென்மராட்சி பிரதேச அமைப்பாளரும் , சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் சர்வா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு