பூப்புனித நீராட்டு விழாவில் அன்பளிப்பு பணம் திருட்டு..! சிறுவன் ஒருவன் திருடி சென்றதாக தகவல்..

ஆசிரியர் - Editor I
பூப்புனித நீராட்டு விழாவில் அன்பளிப்பு பணம் திருட்டு..! சிறுவன் ஒருவன் திருடி சென்றதாக தகவல்..

யாழ்.நகரை அண்டிய பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் அன்பளிப்பு பணத்தை சிறுவன் ஒருவன் துாக்கி சென்றுள்ளான். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, கொக்குவில் பகுதியை சேர்ந்தவர்கள் நேற்றைய தினம் யாழ்.நகரை அண்டிய பகுதியில் உள்ள ஓர் மண்டபத்தை பதிவு செய்து 

அங்கே பூப்புனித நீராட்டுவிழா நிகழ்வுகளை மேற்கொண்டனர். இவ்வாறு இடம்பெற்ற திகழ்விற்கு சென்ற உறவுகள் செல்வியை ஆசீர்வதித்து வழங்கிய அன்பளிப்பு பணத்தினை 

மேடையின் அருகே ஓர் பையில் பாதுகாத்தனர். இதனை அவதானித்த சிறுவன் ஒருவர் மண்டபத்தில் இருந்த கூட்டத்தை பயன்படுத்தி அன்பளிப்பு பணத்தை சுறுட்டிச் சென்றுள்ளார்.

அன்பளிப்பாக வழங்கப்பட்ட பணம் என்ற வகையில் களவு போன பணம் எவ்வளவு என சரியாக கணிப்பிட முடியாத போதும் சுமார் ஒரு லட்சம் ரூபாவினை தாண்டிச் செல்லும் எனக் கூறப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு