சீனாவின் தடுப்பூசி மிக ஆபத்தானது..! இன்றும் சோதனை கட்டத்திலுள்ள தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவது எவ்வாறு..?

ஆசிரியர் - Editor I
சீனாவின் தடுப்பூசி மிக ஆபத்தானது..! இன்றும் சோதனை கட்டத்திலுள்ள தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவது எவ்வாறு..?

இலங்கையில் அடுத்தவாரம் பயன்பாட்டுக்கு வரவுள்ள சீனாவின் கொரோனா தடுப்பூசியினால் பெரும் ஆபத்து உருவாகும். என அரச மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் ரவிகுமுதேஸ் கூறியிருக்கின்றார். 

சீனாவின் மருந்து இன்னமும் ஆராய்ச்சியளவிலேயே காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். சீனாவின் மருந்தின் தாக்கம் தெரியாததால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள ரவிகுமுதேஸ் சீனாவின் மருந்தினை 

உலக சுகாதார ஸ்தாபனம் இன்னமும் அங்கீகரிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். சீனாவின் தடுப்பூசி இன்னமும் மூன்றாம் கட்ட சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை அதன் செயல்திறன் குறித்த தகவல்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு