யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சோி வைத்தியசாலை ஆகியவற்றில் நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு தொற்று..! விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சோி வைத்தியசாலை ஆகியவற்றில் நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு தொற்று..! விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் 2 பேர் உட்பட 3 பேருக்கு இன்று வடமாகாணத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 419 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் 

கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட சுண்டுக்குளியைச் சேர்ந்த 37 வயதுடைய ஆண் ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையில் கொரோனா அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட பெண் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

அவர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் ஒருவருடன் தொடர்புடையவர். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் பெண் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஆடைத்தொழிற்சாலை பணியாற்றும் தொற்றாளர் ஒருவருடன் தொடர்புடையவர்.

என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு