பஸ் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது, மேலும் இருவர் ஆபத்தான நிலையில், 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்..

ஆசிரியர் - Editor I

கட்டுப்பாட்டை இழந்த பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருக்கும் நிலையில் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், 32 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பசறை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் வைத்திய அதிகாரி கே.எம். சமரபந்து தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 6 பெண்களும் அடங்குகின்றனர். பதுளை மாகாண வைத்தியசாலையில் 16 ஆண்களும், 14 பெண்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 9பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 2அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாகாண வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக விசேட வைத்திய குழுக்களும், சுகாதார குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக 8 அம்பியூலன்ஸ் வண்டிகள் சேவையிலுள்ளன. சிசிடிவி காட்சிகளின் படி எதிர்த்திசையில் வந்த டிப்பர் ரக வாகனத்தை தாண்டிச் செல்ல முற்பட்ட வேளையிலே 

பஸ் வண்டி வீதியை விட்டு விலகி 200அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது. விபத்தில் பஸ்ஸின் சாரதியும் உயிரிழந்துள்ளார். பசறை பொலிஸார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு