இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது..! இன்று மட்டும் 298 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது..! இன்று மட்டும் 298 பேருக்கு தொற்று உறுதி..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை சடுதியாக அதரிகரித்து வருகின்றது. இன்று  இரவு 9 மணிவரையில் 298 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை, அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 89 473 ஆக அதிகரித்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 86 227 பேர் குணமடைந்துள்ளதோடு , 2564 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதேவேளை 8 இலட்சத்து 15 585 பேருக்கு நேற்று வரை கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டு;ள்ளது.நேற்று வியாழக்கிழமை மேலுமொரு கொவிட் மரணம் பதிவாகியது. 

இவ்வாறு உயிரிழந்தவர் இப்பாகமுவ பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆணொருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் கடந்த 17 ஆம் திகதி இரத்தம் நஞ்சானமை, 

கொவிட் நிமோனியா என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு