நொதேண்பவர் நிறுவனத்தை யாழ்ப்பாணத்தில் மீள ஆரம்பிக்கும் தீர்மானத்தை மின்சக்தி அமைச்சு எடுக்கவில்லை..! எழுத்துமூல கடிதத்தை பிரதேச செயலருக்கு அனுப்பியது அமைச்சு..

ஆசிரியர் - Editor I
நொதேண்பவர் நிறுவனத்தை யாழ்ப்பாணத்தில் மீள ஆரம்பிக்கும் தீர்மானத்தை மின்சக்தி அமைச்சு எடுக்கவில்லை..! எழுத்துமூல கடிதத்தை பிரதேச செயலருக்கு அனுப்பியது அமைச்சு..

நொதேண்பவர் நிறுவனத்தை மீள இயங்குவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. என மின்சக்தி அமைச்சு யாழ்.உடுவில் பிரதேச செயலருக்கு எழுத்துமூலம் அறிவித்தல் வழங்கியிருக்கின்றது. 

யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் நடுப்பகுதியில் நடைபெற்றிருந்த நிலையில் நொதேண்பவர் நிறுவனம் மீளவும் யாழ்.மாவட்டத்தில் தமது பணிகளை ஆரம்பிக்கவுள்ள விடயம்

அபிவிருத்தி குழுவின் கவனத்திற்கு முன்வைக்கப்பட்டதுடன், சமூகமட்ட அமைப்புக்கள், பொதுமக்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் கூற்றுக்களுக்கு அமைவாக குறித்த நிறுவனம் மீளவும் இயங்ககூடாது. 

என வலியுறுத்தப்பட்டதன் அடிப்படையில் நொதேண்பவர் நிறுவனத்தின் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிக்க இடமளிப்பதில்லை. என்ற தீர்மானத்தினை மாவட்ட அபிவிருத்தி குழு எடுத்திருந்தது. 

நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உடுவில் பிரதேச செயலர் ஊடாக மின்சக்தி அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகளை மீளவும் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கும் 

தீர்மானத்தை அமைச்சு எடுக்கவில்லை. என சுட்டிக்காட்டி அமைச்சின் தொழிநுட்ப ஆராய்ச்சி மற்றும் கொள்ளை உருவாக்கத்திற்கான மேலதிக செயலாளர் சுசந்த பெரேரா கையொப்பமிட்டு

உடுவில் பிரதேச செயலருக்க எழுத்துமூல ஆவணம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு