ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கைக்கு அழைக்க அரசு பிரயத்தனம்..! கசிந்தது தகவல்..

ஆசிரியர் - Editor I
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கைக்கு அழைக்க அரசு பிரயத்தனம்..! கசிந்தது தகவல்..

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலே பச்செலெட்டை இலங்கைக்கு அழைப்பது தொடர்பாக அரசாங்கம் தீவிரமான ஆராய்வில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மனித உரிமை ஆணையாளர் இலங்கையை கடுமையாக சாடும் அறிக்கையை வெளியிட்ட பின்னர் இது குறித்து அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் ஆராயப்பட்டதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் காணப்படும் நிலவரத்தினை மனித உரிமை ஆணையாளர் நேரில் பார்வையிடுவதற்காக அவரை இலங்கைக்கு அழைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. 

ஆம் அது குறித்து ஆராயப்படுகிறது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளர் எனினும் இறுதி முடிவு எதனையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வின் இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு