தற்செயலாக சிக்கிய பிரபல திருடன்..! 21 சைக்கிள்கள் மீட்பு, மேலும் பல சைக்கிள்களை மீட்க பொலிஸார் நடவடிக்கை..
பருத்துறை சிவன் கோவிலுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமானமுறையில் நடமாடிய நிலையில் கைது செய்யப்பட்ட 23 வயதான இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குறத்த இளைஞன் ஒரு சைக்கிள் திருடன் என தொியவந்துள்ளதுடன்,
திருடப்பட்ட 21 சைக்கிள்களை பெருத்துறை பொலிஸார் மீட்டிருப்பதுடன், மேலும் சில சைக்கிள்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்திருக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருக்கின்றது.
திருடப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை சந்தேக நபர் விற்பனை செய்து பணத்தை எடுத்துள்ளார்.மீட்க்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. துவிச்சக்கர வண்டி திருடப்பட்டிருந்தால்
உரியவர்கள் அதனை அடையாளம் காட்டமுடியும் என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் இன்று பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார்.