வீட்டிலிருந்த வாயில்லா ஜீவன்களை கொன்று, பெறுமதியான பொருட்களை சேதப்படுத்திய காடைர்கள்..! யாழ்.பருத்துறையில் சம்பவம்...
யாழ்.பருத்துறை - சுப்பர்மடம் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த காடையர்கள் வீட்டிலிருந்த வளர்ப்பு நாய் மற்றும் புறாக்களை கொன்றதுடன் வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.
குறித்த வீட்டில் உள்ளவர்கள் சிவராத்திரி வழிபாட்டுக்காக ஆலயத்துக்கு சென்றிருந்த நிலையில் குறித்த வன்மச் செயல் காடையர் கும்பலால் நடத்தப்பட்டுள்ளது.
ஆலயத்திலிருந்து அதிகாலை வீடு திரும்பியபோது அங்கு சேதமாக்கியிருந்தமையை அவதானித்தனர்.
வளர்ப்பு நாய் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்த்துடன். புறாக் கூட்டை சேதப்படுத்தி புறாக்கள் சில கொலை செய்யப்பட்டிருந்தன.
வீட்டில் பெறுமதியான பொருள்கள் அடித்துச் சேதப்படுத்தப்பட்டிருந்தன என விசாரணையில் தெரிவிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவ இடம்பெற்ற வீட்டில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.