மன்னார் திருக்கேதீஸ்வரம் தற்காலிக வளைவு மீள அமைக்கப்பட்டது..! சிவராத்திரி தினத்தை முன்னிட்டு..

ஆசிரியர் - Editor I
மன்னார் திருக்கேதீஸ்வரம் தற்காலிக வளைவு மீள அமைக்கப்பட்டது..! சிவராத்திரி தினத்தை முன்னிட்டு..

மஹா சிவராத்திரி பூஜைகள் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணி நடைபெறவிருக்கும் நிலையில், 

நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக மன்னார் யாழ்.பிரதான வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தற்காலிக அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாக சபையினர் மற்றும் திருத்தொண்டர்கள் இணைந்து அலங்கார வளைவை அமைத்ததுடன், சிவராத்திரி தினத்தை முன்னிட்டு 

நுழைவு பகுதியில் சிரமதான பணிகளையும் முன்னெடுத்துள்ளனர்.இம்முறை கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட மக்களின் பங்களிப்புடன், 

கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி திருகேதீஸ்வர சிவராத்திரி நிகழ்வுகள் மற்றும் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு