யாழ்.நகரில் உள்ள ஹார்கில்ஸ் திரையரங்க பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! 3 நாட்களுக்கு திரையரங்கு முடக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் உள்ள ஹார்கில்ஸ் திரையரங்க பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! 3 நாட்களுக்கு திரையரங்கு முடக்கம்..

யாழ்.நகரில் உள்ள ஹார்கில்ஸ் திரையரங்க பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 3 நாட்களுக்கு திரையரங்கு முடக்கப்படுவதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 309 பேரின் மாதிரிகள் இன்று பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 10 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 7 பேர் யாழ்ப்பாணம் ஹார்கில்ஸ் கட்டடத் தொகுதியில் உள்ள திரையரங்கில் உள்ள திரையரங்கில் பணியாற்றும் பணியாளர்கள். அந்த திரையரங்கில் பணியாற்றுபவருடன் தொடர்புடைய ஒருவருக்கு தொற்றுள்ளமையை அடுத்து 

திரையரங்கு கடந்த இரண்டு நாளாக மூடப்பட்டுள்ளது.அங்கு பணியாற்றுபவர்கள் முடக்கப்பட்ட நிலையில் இன்று பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். அவர்களில் 7 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு