பச்சிளம் குழுந்தையை அடித்து துன்புறுத்திய தாய் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம்..! பொலிஸ் பேச்சாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
பச்சிளம் குழுந்தையை அடித்து துன்புறுத்திய தாய் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம்..! பொலிஸ் பேச்சாளர் தகவல்..

யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் 8 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குழந்தையின் தாய் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம். என கூறியிருக்கும் பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, 

இதற்காக அவருக்கு எதிராக 20 வருடங்கள் சிறை தண்டணை விதிக்கப்படலாம். எனவும் பொலிஸ்மா அதிபர் கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 300, 308 மற்றும் 308 ஏ ஆகியவற்றின் கீழ் 

கொலை முயற்சி மற்றும் சிறுவர் கொடுமை போன்றவற்றின் அடிப்படையில் சந்தேக நபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் குழந்தையின் தாயாரான சந்தேக நபர், நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸாரின் விரைவான நடவடிக்கையின் கீழ் 

நேற்று கைதுசெய்யப்பட்டார்.சந்தேக நபரின் கணவர் அரபு நாடு ஒன்றில் தொழில்வாய்ப்புப் பெற்றுச் சென்ற நிலையில் அவர் குழந்தையை எப்போதும் அடித்துத் துன்புறுத்துவதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

அதனாலேயே இதனை வெளிக்கொண்டு வருவதற்காக பெண்ணின் சகோதரனே காணொளிப் பதிவு எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு