தடையற்ற மின்சார விநியோகத்தை வழங்குவதில் சிக்கில்..! நீர் மின் உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சி..

ஆசிரியர் - Editor I
தடையற்ற மின்சார விநியோகத்தை வழங்குவதில் சிக்கில்..! நீர் மின் உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சி..

நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துவரும் நிலையில் தடையற்ற மின்சார விநியோகத்தில் சிக்கல் உருவாகும். என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தொிவித்திருக்கின்றது. 

வறண்ட வானிலை காரணமாக 74% மின்சார உற்பத்தியை நிலக்கரி, டீசல் மற்றும் வெப்பம் ஆகியவற்றின் ஊடாகவே பெற வேண்டிய நிலைமை காணப்படுகின்றது எனவும்,

அந்த அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை இந்த நாட்களில், மொத்த மின் உற்பத்தி சுமார் 38.46 ஜிகாவாட் ஆகும். 

வறண்ட வானிலை காரணமாக நீர் மின் உற்பத்தி 23.1% ஆக குறைந்துள்ளதாக இலங்கை மின்சார வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனாலும் எந்தவிதமான தடைகளும் இல்லாமல் மின்சாரத்தை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு