45 கிலோ ஹெரோயினுடன் இராணுவ சிப்பாய் உள்ளிட்ட இருவர் கைது..! 2 மாதங்களில் கைப்பற்றப்பட்ட 4வது அதிகூடிய போதைப்பொருள் இதுவாகும்..

ஆசிரியர் - Editor I
45 கிலோ ஹெரோயினுடன் இராணுவ சிப்பாய் உள்ளிட்ட இருவர் கைது..! 2 மாதங்களில் கைப்பற்றப்பட்ட 4வது அதிகூடிய போதைப்பொருள் இதுவாகும்..

சுமார் 45 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் இராணுவ சிப்பாய் உட்பட இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். 

கடந்த 2 மாதங்களுக்குள் அதிகாரிகள் கைப்பற்றிய நான்காவது பாரியளவிலான போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கை இதுவாகும்.

பாணந்துரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று காலை மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவ‍ேளை நாடளாவிய ரீதியில் நேற்று போதைப் பொருள் தொடர்பில் 135 சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய இரத்தினபுரி மற்றும் கம்பளை ஆகிய பிரதேசங்களில் ஹெரோயினுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு