புதிய 20 ரூபாய் நாணய குற்றிகள் மார்ச் 3ம் திகதி தொடக்கம் மக்கள் பாவனைக்கு..! இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
புதிய 20 ரூபாய் நாணய குற்றிகள் மார்ச் 3ம் திகதி தொடக்கம் மக்கள் பாவனைக்கு..! இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது..

இலங்கையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் 20 ரூபாய் நாணய குற்றி மார்ச் மாதம் 3ம் திகதி தொடக்கம் மக்கள் பாவனைக்கு விடப்படுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயத்தை 

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கினார்.

இது இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட நினைவு சுழற்சி நாணயம் ஆகும்.

நாணயம் 7 பக்க வடிவத்துடன் நிக்கல் பூசப்பட்ட எஃகு மூலம் தயாரிக்கப்படுகிறது.இந்த நாணயம் மார்ச் 03 முதல் 05 மில்லியன் பெறுமதியான நாணயங்கள்,

நாட்டின் நாணய சுழற்ச்சியில் சேர்க்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு