பேச்சுவார்த்தை ஆரம்பம்..! இரு நாட்டு பிரதமர்களும் இணைந்து ஊடகங்களை சந்திக்க தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
பேச்சுவார்த்தை ஆரம்பம்..! இரு நாட்டு பிரதமர்களும் இணைந்து ஊடகங்களை சந்திக்க தீர்மானம்..

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்த்தான் பிரதமருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை 4 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததார்.

இலங்கை வந்த பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமரான இம்ரான் கானை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட உயர்மட்டக்குழுவினர் வரவேற்றனர்.

இந்நிலையில் தற்போது அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்குமிடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது. 

இதையடுத்து ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பை இருவரும் மேற்கொள்ளவுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு