யாழ்.பல்கலைகழக பட்டமளிப்பு விழா ஆடியபாதம் வீதி, இராமநாதன் வீதி ஆகியவற்றில் ஒரு வழி பயணத்திற்கு மட்டும் அனுமதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக பட்டமளிப்பு விழா ஆடியபாதம் வீதி, இராமநாதன் வீதி ஆகியவற்றில் ஒரு வழி பயணத்திற்கு மட்டும் அனுமதி..!

யாழ்.பல்கலைகழகத்தின் 35வது பட்டமளிப்பு விழா 24ம், 25ம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் குறித்த இரு நாட்களும் இராமநாதன் வீதி மற்றும் ஆடியபாதம் வீதி ஆகியன ஒருவழி பயணத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆடியாபாதம் வீதியில், திருநெல்வேலிச் சந்தியில் இருந்து பிறவுண் வீதிச் சந்தி நோக்கிச் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியில் இருந்து பரமேஸ்வராச் சந்தி நோக்கிச் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

இதே நேரம், ஆடியபாதம் வீதி, வளாக ஒழுங்கை, இராமநாதன் வீதி, புகையிரத நிலைய ஒழுங்கை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் தரித்து நிற்பதற்குத் தடைசெய்யப்பட்டிருப்பதுடன், பட்டமளிப்பு விழாவுக்கு வருபவர்களின் வாகனங்களை 

யாழ்ப்பாணம் தொழில் நுட்பக் கல்லூரி மைதானத்தினுள் நிறுத்துவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு