யாழ்.சுன்னாகம் உள்ளிட்ட 6 இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு..! ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கொள்ளை கும்பலே காரணமாம், பொலிஸார் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I

யாழ்.சுன்னாகம் உள்ளிட்ட 6 இடங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் 6 மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக கூறியிருக்கும், பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, 

குறித்த கொள்ளை சம்பவங்கள் அனைத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கொள்ளை கும்பலினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். எனவும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். 

கட்டான, சீனன்குடா, சுன்னாகம், புத்தளம், பொல்பித்திகமை, அனுராதபுரம் ஆகிய 6 இடங்களில் இந்த மோட்டார் சைக்கிள் திருட்டு இடம்பெற்றிருப்பதாக கூறியிருக்கும் பொலிஸ் பேச்சாளர் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்குமாறும், 

கோரிக்கை விடுத்திருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு