பிரதமருடைய கருத்து அல்லது அறிக்கை சட்டம் அல்ல..! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விளக்கம்...

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் நல்லடக்கம் தொடர்பான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் கருத்து நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு அமைய கூறப்பட்டிருக்க வேண்டிய கருத்தாகும்.

மேலும் அது பிரதமரின் கருத்து மட்டுமேயாகும். அது ஒருபோதும் சட்டம் ஆகாது. என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முக்கியஸ்த்தர் ஹரித்த அலுத்கே கூறினார்.

இது குறித்து மேலும் அவர் கூறிகையில், வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ள முறைகள் குறித்து அவதானம் செலுத்துவது பிரச்சினைக்கு தீர்வாக அமையலாம்.

எது எவ்வாறாயினும் பிரதமரின் கருத்து அல்லது அறிக்கை என்பது சட்டமாகாது, எனவே வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்பே அதனை நடைமுறைப்படுத்தலாம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு