மீண்டும் இழுபறியில் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படும் விவகாரம்..! சுகாதார அதிகாரிகள் மெளனம்..

ஆசிரியர் - Editor I

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை மத முறைப்படி அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என பிரதமர் நாடாளுமன்றத்தில் கூறிய கருத்து தொடர்பில் சகல தரப்பும் மெளனம் சாதித்துவருகின்றனர்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார். 

ஆனால் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை கட்டாயமாக்கும் தற்போது காணப்படும் வர்த்தமானி அறிவித்தலில் மாற்றங்கள் வருமா என்பது குறித்து எதுவும் தெரியாத நிலையில் 

சுகாதார அதிகாரிகளும் அரசாங்க அதிகாரிகளும் காணப்பட்டனர் என ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் முடிவை மாற்றுவது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து தங்களுக்கு நேற்றுமாலைவரை அறிவுறுத்தல் எதுவும் கிடைக்கவில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்ததாகவும் குறித்த ஆங்கில பத்திரிகை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற அறிவிப்பின் ஊடாகவே இது குறித்து அறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களில் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது குறித்த கலந்துரையாடல்கள் எவையும் இடம்பெறவில்லை.

என தெரிவித்துள்ள சிரேஸ்ட அரச அதிகாரியொருவர் வைரஸ் நீரினால் பரவாது என அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்ததை தொடர்ந்தே மீண்டும் இந்த விடயத்தை நோக்கி கவனம் திரும்பியது என குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு