நாட்டு மக்களிடம் பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள கோரிக்கை..! இந்த அறிகுறிகள் இருப்பின் உடனடியாக சிகிச்சை பெறுங்கள்..

ஆசிரியர் - Editor I

காய்ச்சல், இருமல், சளி, மூச்சுதிணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது கட்டாயம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொவிட் நோயாளிகளைக் கண்டறிவது தொடர்பாக சுகாதார பரிசோதக அதிகாரிகள் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதால், பொதுமக்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சினையால் அவதிப்பட்டால் 

மருத்துவ சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரியா வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான மக்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொவிட் தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர்.

அதேநேரம் பழுதடைந்த பி.சி.ஆர் இயந்திரங்கள் மற்றும் பி.சி.ஆர் மாதிரிகள் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் தாமதம் போன்ற காரணங்களினால் 

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு