இலங்கையில் கொரோனா தொற்றினால் 1வது பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு..! 3 பிள்ளைகளின் தந்தை..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார். மொனராகலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருக்கின்றார். 

பொலிஸ் திணைக்களத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்த முதல் அதிகாரி இவர்தான் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரி 59 வயதுடையவர் என அவர் தெரிவித்தார்.குறித்த பொலிஸ் அதிகாரி மாரடைப்பு காரணமாக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று குழந்தைகளின் தந்தையாகிய பொலிஸ் அதிகாரி ஓய்வு பெற தயாராக இருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு