நான் நடிகனுமில்லை, இங்கே நாடகம் நடக்கவுமில்லை..! ஐனாதிபதி சீற்றம்...

ஆசிரியர் - Editor I

அரசியல் நாடகங்களை நடத்தி ஊடகங்களில் பிரச்சாரங்கள் நடத்தி அரசியலுக்குள் வந்தவன் நானல்ல. கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திப்பது மக்களின் தேவைகளை அறிய மட்டுமே அது என்னுடைய வழி.

மேற்கண்டவாறு ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ கூறியுள்ளார். நேற்றய தினம் தெரணியகல பகுதியில் மக்களை சந்தித்து கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

ஜனாதிபதியான நான் கிராமங்களுக்கு செல்ல வேண்டிய தேவை கிடையாது என்றும் இது அரசியல் நாடகம் என்றும் என்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

அரசியல் நாடகங்களை அரங்கேற்றியோ அல்லது ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்தோ நான் ஜனாதிபதியாகவில்லை. 

ஜனாதிபதி நேரடியாக கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை கிடையாது. இது அரசியல் நாடகமாகும் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

அரசியல் நாடகங்கள் அரங்கேற்றப்படுவது தேர்தல் காலங்களிலாகும். அதற்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன.

ஏன் ஜனாதிபதி கிராமங்களுக்குச் செல்கின்றார் ? அதற்கு அதிகாரிகள் இருக்கிறார்கள் அல்லவா என்று சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை செய்திருக்கிறார்கள். 

அதிகாரிகள் ஊடாக மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் முறைமையும் உள்ளது. ஆனால் நேரடியாக மக்களை சென்று சந்திப்பதே நான் பின்பற்றும் முறைமையாகும்.

கிராமப்புறங்களிலுள்ள அப்பாவி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதை தவறான புரிந்து கொள்ளவோ அல்லது திரிபுபடுத்தவோ கூடாது. 

மனிதாபிமானத்தை மக்களுக்கான வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்த வேண்டும். அரசியல் நாடகங்களை அரங்கேற்றி அல்லது ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்து 

நான் ஜனாதிபதியாகவில்லை. வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக மக்கள் மத்தியில் செல்ல முடியும் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு