பொலிஸ் சீருடைகளுடன் திருடர்கள்..! அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை....

ஆசிரியர் - Editor I

பொலிஸாரைபோல் வேஷத்துடன் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளையிடும் கும்பல் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொலிஸ் தலமையகம் அறிவித்துள்ளது.

கட்டுகஸ்தோட்டை பகுதியில் நான்கு பேர் காவல்துறையினர் என்ற போர்வையில் வீட்டில் புகுந்து கொள்ளையிட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

விசாரணைகளுக்காக வந்துள்ளதாகத் தெரிவித்து குறித்த கொள்ளையர்கள் ஐந்து லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

காவல்துறையினர் என அடையாளப்படுத்திக் கொள்வோருக்கு அவர்களது அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.

அடையாள அட்டைகளை காண்பிக்குமாறு அவ்வாறானவர்களிடம் கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டுமென காவல்துறை ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு