யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்தில் சிக்கியது..

ஆசிரியர் - Editor I

மாங்குளம் - செல்வபுரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இ.போ.ச பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

காலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று (06.02.2021) அதிகாலை 03.30 மணியளவில் பதிவாகியுள்ளது. விபத்துக்குள்ளான பேருந்து வீதி அருகில் உள்ள தனியார் காணி ஊடாக பயணித்துள்ளது. 

எனினும் அவ்விபத்தின்போது பயணித்த பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர். 

விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு